இடுகைகள்

ஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்

படம்
ம கிழ்ச்சியுடன் வணக்கம் சொல்ல முடியாத காவிரி கரையின் விவசாயி எழுதுகிறேன். இருந்தாலும் ஒரு மரியாதைக்காக சொல்கிறேன், வணக்கம். ஆம், நாங்கள் எளிய மனிதர்கள்தான். விதைப்பும், அறுவடையும் தவிர மற்ற அனைத்தும் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான். வெண்ணாற்றங்கரையில் இருந்து பிரிந்து செல்லும் கல்யாண ஓடை கிளை வாய்க்காலின் பாலக்கட்டையின் மீது அமர்ந்து, காலை தினத்தந்தியில் மேட்டூர் அணை நீர்மட்டம் பார்க்கும் பழக்கம் இன்னமும் எங்களிடம் இருந்து விடைபெற்றுவிடவில்லை. அந்த நம்பிக்கைக் கீற்று ஏதோ ஒரு ஓரத்தில் ஒட்டியிருக்கிறது. ஆனால், அது உங்களைப் போன்ற ஆட்சியாளர்கள் விதைத்த நம்பிக்கை இல்லை... அது காவிரி மீதான எங்களின் பல்லாயிரம் ஆண்டுகால மரபுரிமையின் மிச்சம். ‘நடந்தாய் வாழி காவேரி’ என இளங்கோவடிகள் எழுதியதை இலக்கியத்தின் மிகைப்பொய் என நீங்கள் புறக்கணித்துவிடக்கூடும். ஆனால், ‘காவிரி தீரத்தில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட விவசாய முறை இருந்தது’ என அதிகாரப்பூர்வ ஆய்வுகள் சொல்கின்றன. 11,000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நடுவர் மன்றம் இல்லை, தீர்ப்பாயம் இல்லை, உச்சநீதிமன்றம் இல்லை, ஏன், இந்தியா என

நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன? அறிவியலா, ஆபத்தா? - முழுமையான விளக்கம்

படம்
நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது தமிழ்நாட்டின் புதிய பேசுபொருளாக மாறியிருக்கிறது . தேனி மாவட்டத்தில் அமையவுள்ள இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது அடிப்படையான அறிவியல் என்பது ஒரு பார்வையாகவும் , ‘ இல்லை ... நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரும் ’ என்பது இன்னொரு பார்வையாகவும் முன்வைக்கப்படுகிறது . கூடங்குளம் அணு உலை , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் போன்ற பெரும் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்றன என்றபோதிலும் , இவற்றில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் வேறுபட்டது . கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள் . டெல்டா மாவட்டங்களில் பூமியின் அடியாழத்தில் உள்ள மீத்தேன் வாயுவை எடுக்கப் போகின்றனர் . ஆனால் , நியூட்ரினோ திட்டத்தில் எந்த பொருளையும் உற்பத்தி செய்யப்போவது இல்லை . அங்கு நடைபெறப்போவது ஓர் அறிவியல் ஆய்வு . தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த டி . புதுக்கோட்டை கிராமத்தின் மேற்கு எல்லையாக அமைந்திருக்கும் அம்பரப்பர் மலைதான